திருச்சி : திருச்சி மண்டல ரயில்வே அலுவலக நுழைவு வாயில் கல்வெட்டில் இருந்த இந்தி பெயரை அகற்ற அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர். அலுவலக முற்றுகை போராட்டம் நடத்தி இந்திப் பெயரை கருப்பு மை பூசி திமுகவினர் அழித்த நிலையில், இந்தியில் உள்ள பெயரை நாளைக்குள் மாற்றுவதாக திருச்சி ரயில்வே கோட்ட அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
