முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதனைத்தொடர்ந்து அவரது அணியினர் திமுகவில் இணைவதற்கான விழா பிரமாண்ட பொதுக்கூட்டமாக நடைபெற உள்ளது. இவ்விழா மதுரை – விருதுநகர் நான்கு வழிச்சாலையில் திருமங்கலம் அடுத்த ராயபாளையம் விலக்கு பகுதியில், வரும் 7ம் தேதி நடக்க உள்ளது.
விழாவில் பங்கேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். மேலும், திமுக முன்னணி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். இக்கூட்டத்திற்கான கால்கோள் விழா, ராயபாளையம் விலக்கில் இன்று காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சேடபட்டி மணிமாறன் தலைமை வகிக்கின்றனர். இதில் ஓபிஎஸ் மற்றும் முன்னாள் எம்எல்ஏ அய்யப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
