யார் மேஜர் பார்ட்னர் யார் மைனர் பார்ட்னர்? அதிமுக, பாஜவை கலாய்த்த அமைச்சர்

புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அதிமுகவில் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குறைந்த கட்சிகள் தான் உள்ளது. அவர்கள் கூட்டணியை ஆரம்பித்து பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை. யார் மேஜர் பார்ட்னர், யார் மைனர் பார்ட்னர் என்ற முடிவு வரவில்லை. அதிமுக கூட்டணி இடியாப்பச்சிக்கல். இன்றைய சூழ்நிலையில் அதிமுகவை டெபாசிட் இழக்க கூடிய சூழ்நிலை சில தொகுதிகளில் உருவாகி இருக்கிறது.

பிரதமர் மோடி வேண்டுமென்றால் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்று பகல் கனவு காணலாம். எங்களது கனவு உண்மையான கனவு. எங்களது நினைவும் உண்மையான நினைவு. 200 நிச்சயம் வெல்வோம், 200 படைப்போம் வரலாறு, அதில் தமிழ்நாடு சரித்திரத்தின் வரலாறாக இருக்கும். இந்த தேர்தலில் எந்த சவாலும் எங்கள் கண்ணுக்கு தெரியவில்லை. அதனால் அகம்பாவம் பிடித்து சொல்லக்கூடாது. எது வந்தாலும் சமாளிப்பதற்கு தயாராக இருக்கின்ற இயக்கம் தான் திமுக. இவ்வாறு அவர் கூறினார்.

* தவெக ஆளில்லா வீடு
‘‘தவெகவுடன் காங்கிரஸ் திறைமறைவு பேச்சுவார்த்தை அப்படியெல்லாம் கப்சாவாக கிளப்பி விடுகின்ற விஷயம். எங்களை பொறுத்தவரை தெளிவாக இருக்கிறோம். இது அரசியல் கட்சி, இங்கு வந்தால் அரசியல் அந்தஸ்து கிடைக்கும் என்பது காங்கிரஸ் தலைமைக்கு தெரியும். அவர்கள் அரசியல் அந்தஸ்தை இழக்க விரும்ப மாட்டார்கள்.

தமிழ்நாட்டில் திமுகவுடன் கூட்டணி வைத்தால்தான் சட்டமன்றத்திற்குள் அவர்கள் வரமுடியும் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். விஜய் இடம் யாரும் செல்லாததால் காங்கிரஸ் கட்சியின் மதிப்பை விஜய் புரிந்திருக்கலாம். அவ்வளவுதான். ஆள் இல்லாத வீட்டில் என்ன வேணாலும் கொண்டாடலாம். தவெக ஆளில்லா வீடு’’ என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

Related Stories: