மக்களவை உரிமை குழு தலைவராக ரவி சங்கர் பிரசாத் பரிந்துரை

புதுடெல்லி: 2024ம் ஆண்டு அமைக்கப்பட்ட 18வது மக்களவையில் முதல் முறையாக சிறப்புரிமை குழு அமைக்கப்படுகின்றது. இந்த சிறப்புரிமை குழுவின் தலைவராக முன்னாள் சட்ட அமைச்சரும், பாஜ தலைவருமான ரவி சங்கர் பிரசாத் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். மேலும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா 14எம்பிக்களை குழுவின் உறுப்பினர்களாக நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணிக்கம் தாகூர் எம்பியின் பெயரும் இதில் இடம்பெற்றுள்ள நிலையில், அவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதால் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: