பா.ஜ ஆட்சி வேண்டுமா..? மம்தாவின் மருமகன் ஆட்சி வேண்டுமா..? அமித்ஷா நேரடி கேள்வி

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு உள்துறை அமைச்சர் அமித்ஷா அங்கு பிரசாரம் மேற்கொண்டுள்ளார். தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும் போது, ‘மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் பாஜ வெற்றி பெற்றால் ஊடுருவல்காரர்களை விரட்டியடிப்போம். எஸ்ஐஆர் பணி முடிந்த பிறகு வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் இருந்து ஊடுருவல்காரர்களின் பெயர்கள் மட்டுமே இப்போது நீக்கப்பட்டுள்ளன. மேற்குவங்க மாநிலத்தை ஊடுருவல்காரர்களுக்கான சொர்க்கமாக திரிணாமுல் காங்கிரஸ் மாற்றி விட்டது.

சட்டவிரோத குடியேற்றத்தை அனுமதித்ததால் மேற்குவங்கத்தின் பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டது. ஏனெனில் மேற்குவங்கம் ஒரு எல்லையோர மாநிலம். ஊடுருவலை அனுமதிப்பதால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியால் மாநிலத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது. மேற்குவங்கம் போன்ற எல்லையோர மாநிலத்திற்கு பாஜ மட்டுமே பாதுகாப்பை வழங்க முடியும. மேற்குவங்கத்தில் இந்து அகதிகளில் ஒருவர் கூட தங்கள் குடியுரிமையை இழக்க மாட்டார்கள் என்பதை நான் உறுதியளிக்க விரும்புகிறேன. ஆனால் மேற்குவங்க மக்கள் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால், மம்தாவால் அல்ல, அவரது மருமகன் அபிஷேக் பானர்ஜியால் நடத்தப்படும் அரசுதான் மேற்குவங்கத்தில் இருக்கும்’ என்றார்.

Related Stories: