கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது

சேலம், மார்ச் 2: சேலம் அடுத்த தாதம்பட்டி பகுதியில், கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வீராணம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, நேற்று அப்பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது, தாதம்பட்டி சுடுகாடு பகுதியில் சந்ேதகப்படும் வகையில் இருந்த ஒருவரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து விற்பனைக்காக அதனை வைத்திருந்த உடையாப்பட்டி பெருமாள் கோயில் மேடு பகுதியைச் சேர்ந்த கிச்சா என்கிற கிருஷ்ணவேல் (25) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 2.250 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Related Stories: