சில்லிபாயிண்ட்…

* மெரிடா மகளிர் டென்னிஸ் பைனலில் மேக்தலீனா
மெரிடா: மெக்சிகோவில் நடந்து வரும் மெரிடா ஓபன் அக்ரோன் மகளிர் ஒற்றையர் டென்னிஸ் அரையிறுதிப் போட்டி ஒன்றில் நேற்று, இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவோலினி, ஸ்பெயின் வீராங்கனை கிறிஸ்டினா பூக்சா உடன் மோதினார். துவக்கம் முதல் சிறப்பாக ஆடிய பூக்சா, 7-5, 6-4 என்ற செட்களில் எளிதில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதிப் போட்டியில் போலந்தின் மேக்தலீனா ஃபிரெச்-சீனாவின் ஜாங் ஸுவாய் மோதினர். இப்போட்டியில் இரு வீராங்கனைகளும் ஆக்ரோஷமாக மோதியபோதும், 6-2, 6-7 (6-8), 6-3 என்ற செட் கணக்கில் மேக்தலீனா வெற்றி வாகை சூடி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

* இரட்டையர் இறுதியில் ஸ்வெரெவ் ஆதிக்கம்
மெக்சிகன் ஓபன் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் பிரேசிலின் மார்செலோ பின்ஹெய்ரா டாவி (42), ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் (28) இணையுடன், அமெரிக்காவின் ராபர்ட் காலோவே, ஆஸ்திரியாவின் அலெக்சாண்டர் எர்லெர் இணையுடன் மோதியது. இப்போட்டியில் அட்டகாச ஆட்டத்திறனை வெளிப்படுத்திய மார்செலோ, ஸ்வெரெவ் இணை 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி கண்டு சாம்பியன் பட்டம் பெற்றனர்.

* ஐஎஸ்எல் கால்பந்து சென்னை-ஒடிசா போட்டி டிரா
புவனேஸ்வர்: இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள் ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் நேற்று நடந்தன. அதில் சென்னையில் எப்சி – ஒடிசா அணிகள் மோதின. போட்டியின் துவக்கம் முதல் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக மோதி கோல் போடுவதில் முனைப்பு காட்டினர். போட்டியின் 45+2வது நிமிடத்தில் சென்னையின் அணி வீரர் எல்ஷினோ தனது அணிக்காக முதல் கோல் போட்டு அசத்தினார். 2வது பாதியில் 68வது நிமிடத்தில் ஒடிசா அணியின் கார்லோஸ் பெல்கடோ அணியின் முதல் கோல் போட்டார். அதனால் இரு அணிகளும் 1-1 என்ற சமநிலையில் இருந்தன. அதன் பின் கோல்கள் விழாததால், அப்போட்டி டிராவில் முடிந்தது.

* ஹாலந்து வீரரிடம் குகேஷ் தோல்வி
பிரேக்: செக் குடியரசில் நடந்து வரும் பிரேக் சர்வதேச செஸ் போட்டியில் மாஸ்டர்ஸ் பிரிவில் நேற்று, இந்தியாவை சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ், ஹாலந்து கிராண்ட் மாஸ்டர் ஜோர்டென் வான் ஃபாரீஸ்ட்டிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் அரவிந்த் சிதம்பரம், ஈரான் வீரர் பர்ஹாம் மக்சூட்லூ உடனான போட்டியில் டிரா செய்தார். பிரேக் சேலஞ்சர்ஸ் பிரிவில் உலக கோப்பையை வென்றுள்ள இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக், 3வது சுற்றில் சீனாவின் ஜினெர் ஸுவிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.

Related Stories: