காகித ஆலையில் விஷ வாயு தாக்கி பீகாரை சேர்ந்த 2 பேர் பலி

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே புஷ்பத்தூரில் தனியார் காகித ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு 200க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று காகித ஆலையில், பழைய காகிதங்களை அரைத்து கூழாக்கும் பாய்லரை சுத்தம் செய்யும் பணியில் பீகார் மாநிலம், பூச்சாரியாவை சேர்ந்த நூர் அலாம் (32), பண்டாரியை சேர்ந்த ராம்புரூஸ் மஞ்சூரி (35) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். திடீரென இருவரும் மயங்கி விழுந்தனர். ஆலை நிர்வாகத்தினர் இருவரையும் மீட்டு மடத்துக்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகவும், விஷவாயு தாக்கியதில் பலியாகியிருக்கலாமென்றும் தெரிவித்தனர். இதுகுறித்து சாமிநாதபுரம் போலீசார் வழக்குப்பதிந்து ஆலை நிர்வாகத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: