டி20 உலக கோப்பை: இலங்கைக்கு எதிரான போட்டி 5 ரன் வித்தியாசத்தில் பாக்.வெற்றி

பல்லேகலே: உலக கோப்பை டி20 ஆடவர் கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 8 குரூப் 2 பிரிவில் நேற்று பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்ய, பாகிஸ்தான் ஓபனர்களாக பர்கான், ஜமான் இறங்கி அதிரடியாக ஆடினர். குறிப்பாக பர்கான் ஆட்டத்தில் அனல் பறந்தது. இருவரையும் அவுட் ஆக்க இலங்ைக பவுலர்கள் எவ்வளவு முறை முயற்சித்தும் பலன் கிட்டவில்லை. இருவரும் அரை சதம் கடந்த நிலையில் பாகிஸ்தான் அணி 15.1 ஓவரில் ஸ்கோர் 176 ஆக இருந்த போது ஜமான் 84 ரன்னில் (42 பந்து, 9 போர், 4 சிக்ஸ்) அவுட் ஆனார். அடுத்து இறங்கிய பாகிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆன போதிலும் பர்கான் சதமடித்து (100 ரன், 60 பந்து, 9 போர், 5 சிக்ஸ்) கடைசி ஓவரில் அவுட் ஆனார். இறுதியாக பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 207 ரன் எடுத்தது. இதனால் பாகிஸ்தான் 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related Stories: