மார்ச்-மே வரை வட தமிழகத்தில் இயல்பை விட அதிகமாக வெப்ப அலை இருக்கக்கூடும்: இந்திய வானிலை மையம்

சென்னை: மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை வட தமிழகத்தில் இயல்பை விட அதிகமாக வெப்ப அலை இருக்கக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் “வெப்ப அலையால் பொது சுகாதாரம், நீர் விநியோகம், மின்சார தேவை, அத்தியாவசிய சேவை பாதிக்கலாம். முதியவர்கள், குழந்தைகள், தொழிலாளர்கள், நோயாளிகளை வெப்ப அலைகள் பாதிக்கலாம். மக்கள் அதிகளவில் நீர் அருந்த வேண்டும்; அதிகமான வெயில் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்” எனவும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: