மதுரை, பிப். 28: மதுரையில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வெற்றி பெறுவதற்கான திறன் மேம்பாடு, தன்னம்பிக்கை நிகழ்ச்சி நடந்தது. மதுரை சேதுபதி பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் நாராயணன் தலைமை வகித்தார். சமூக ஆர்வலர் நேதாஜி சுவாமிநாதன் முன்னிலை வகித்தார்.
பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஆதி ஞானகுமரன், உலக திருக்குறள் பேரவை மகளிர் அணி செயலாளர் சபேரா பீவி அல்லமின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆசிரியர்கள், மாணவர்களுக்கு அனைத்து பாடங்களுக்கும் வழிகாட்டி பேசினர். 100 சதவீதம் வெற்றி பெறுவதற்கு மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிறைவாக உதவி தலைமை ஆசிரியர் திருவேங்கடத்தான் நன்றி கூறினார்.
