ஆர்எஸ்எஸ், பாஜதான் விஜய், சீமானை இயக்குகிறது: விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு

1. பட்டியலின மக்களுக்கு இந்த அரசு செய்தது என்ன? இவர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள்?
பட்டியலின மக்களின் பாதுகாப்பு உறுதி என்று சொல்லக்கூடிய அரசு தான் திமுக அரசு. இந்த 5 ஆண்டுகால ஆட்சியில் இந்த மக்களுக்கான நலத்திட்டங்களை நிறைய செய்துள்ளனர். இந்த மக்களுக்கு மட்டுமல்ல, குறிப்பாக பல கோடி மதிப்பில் எம்.சி.ராஜா விடுதிக்கு புதிய கட்டிடம், அயோத்திதாச பண்டிதர் பெயரில் தொகுப்பு வீடுகள் கட்டியுள்ளனர். இதேபோன்று எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளனர். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தான் ஆதரவு இருக்கிறது. அவர்கள் பக்கம் தான் நிற்கிறார்கள். விசிக இந்த அணியின் பக்கம் இருப்பதால் வெற்றிக் கூட்டணியாக இந்தக் கூட்டணி இருக்கிறது.

2. நாடு முழுவதும் பாஜ ஆளும் மாநிலங்களில் பட்டியலின, சிறுபான்மையின மக்களுக்கு எதிராக வன்முறை தொடர்கிறதே, இதை பற்றி உங்களுக்கு கருத்து? தேசிய குற்ற ஆவண காப்பகம் இந்தியா முழுவதும் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்அடிப்படையில் வட மாநிலங்களில் குறிப்பாக பாஜ ஆளும் மாநிலங்களில் பட்டியலின மக்கள் மட்டுமல்ல, கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து கொண்டு இருக்கிறது.

மாட்டுக்கறி வைத்திருந்ததாக சொல்லி அடித்து படுகொலை செய்த வழக்குகள் உள்ளது. கட்டாய மதமாற்ற சட்டமும் அதில் தான் கொண்டு வந்துள்ளனர். ஹத்ராஸ் போன்ற சம்பவங்கள், உத்தரபிரதேசத்தில் மனிஷா வால்மிகி என்ற சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த போது, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யா நாத் சொல்லும்போது கூட, தாக்கூர் சமூகத்தினர் அப்படி தான் செய்வர்கள், வால்மிகி சமூகத்தினர் கொஞ்சம் பொறுத்து தான் போக வேண்டும்.

கிறிஸ்தவ பாதிரியாரை அடித்து வாயில் மாட்டு சாணத்தை ஊற்றி ஜெய்ஸ்ரீராம் என்று முழக்கமிட சொல்வது, ஹிஜாப் அணிந்து சென்றால் பிடித்து இழுப்பது, பட்டியிலன மக்கள் மாடுகளை பிடித்து சென்றால் அடிப்பது என்று கொடுமையான வன்கொடுமைகள் நடக்கிறது. வடமாநிலங்களில் பட்டியலின மக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், சிறுபான்மையின மக்கள் வாழ்வதற்கு அச்சம் நிறைந்த மாநிலங்களாக தான் உள்ளது என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கள் இல்லை. தேசிய குற்ற ஆவணக்காப்பகமே எத்தனையோ இளம்பெண்கள் காணாமல் போயிருக்கிறார்கள் என்று கூறியுள்ளது.

3. வலுவான திமுக கூட்டணியில் தேமுதிக, ஓபிஎஸ் வருகையை எப்படி பார்க்கிறீர்கள்? ராமதாசும் வந்தால் ஏற்பீர்களா? தேமுதிக வந்திருப்பதால் மேலும் வலிமையாகியுள்ளது. இந்த அணி தமிழ்நாட்டிற்கும், டெல்லிக்குமான போர். தமிழ் நாட்டிற்கும்-என்டிஏவுக்குமான போட்டி என்று முதல்வர் அறிவித்திருந்தார். டெல்லி நிர்வகிக்ககூடிய இந்து ராஷ்டிரம், சனாதனம் இந்த அரசியலை ஏற்றுக் கொண்டுள்ள ஒரு அணி பாஜ, அதிமுக, பாமக உள்ள அணி.

பெரியார், அம்பேத்கர் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ள சமூகநீதி அரசியல், மதச்சார்பற்ற அரசியலை நிர்வகிக்ககூடிய திராவிட மாடல் அணி இந்த இரண்டுக்கும் இடையே தான் போட்டி, பாஜ டெல்லி அணியை வீழ்த்துவது ஒன்று தான் இலக்கு என்று முதல்வர் பல யுக்திகளை கையாண்டு தேமுதிகவை இணைத்துள்ளார். ெவற்றியை உறுதிப்படுத்தக் கூடிய செயல்திட்டம்.

4. விஜய் அழைப்பு விடுத்தும் யாரும் அந்த பக்கம் செல்லவில்லையே? இந்த தேர்தல் எப்படி இருக்கும்? வெற்றி வாய்ப்பு யாருக்கு? விஜய் இன்னும் நடிகராகத் தான் இருக்கிறார். இன்னும் அரசியல் தலைவராக இல்லை. அவரை பின் தொடர்பவர்களும் இன்னும் ரசிகர்களாகத்தான் இருக்கிறார்கள். கட்சி தொண்டர்களாக இல்லை. அரசியல் படுத்தப்பட்டவர்களாக இல்லை. விசில் அடித்தான் கூட்டமாக தான் இருக்கிறார்கள்.

பஞ்ச் டயலாக் பேசக் கூடியவராக விஜய் இருக்கிறார். எதார்த்தத்தை எங்கேயும் காட்டவில்லை. கற்பனை, சினிமா, கவர்ச்சி உலகத்தில் தான் இருக்கிறார். வேலூரில் பேசும்போது கூட என்னை அவமானப்படுத்தினால், மக்களை அவமானப்படுத்துவதாக அர்த்தம் என்று கூறுவது கற்பனை உலகத்தில் இருந்து பேசுவதாக தான் பார்க்க வேண்டும். திமுக ெவற்றியை தடுக்கும் நோக்கத்தில் பாஜ பல ஆட்களை இறக்கி விடுகிறது.

அதில் ஒன்று தான் விஜய் மற்றும் சீமான், இரண்டு பேரும் ஆர்எஸ்எஸ். பாஜவால் இயக்கக் கூடியவர்கள். பார்ப்பன கடப்பாரையை வெளிப்படையாக தூக்கிக் கொண்டு திரிபவர் சீமான். அந்த கடப்பாரையை உள்ளே வைத்துக் கொண்டு திரிபவர் விஜய். இவர்கள் இரண்டு பேரையும் மக்கள் நம்பமாட்டார்கள். மாணவர்கள், மகளிருக்காக பல்வேறு திட்டங்களை கொடுத்திருக்கிற திமுக அணிக்கு தான் வெற்றி அதிகம் உள்ளது.

Related Stories: