மடப்புரம் காவலாளி மரண வழக்கில் பிடிவாரன்ட் எதிரொலி டிஎஸ்பி உடனடி ஆஜர்

மதுரை: சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் (28), போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தார். இதுதொடர்பாக கொலை வழக்கில் தனிப்படை காவலர்கள் 6 பேர் கைதாகினர். இவ்வழக்கில் சிபிஐ தரப்பில் மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கூடுதல் குற்றபத்திரிகையில், மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ், எஸ்ஐ சிவக்குமார், ஏட்டு இளையராஜா ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, டிஎஸ்பி தவிர்த்து மற்ற 3 பேரும் ஆஜராகியிருந்தனர். இதனால், டிஎஸ்பி சண்முகசுந்தரத்திற்கு நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இதையடுத்து உடனடியாக நேற்று தலைமை குற்றவியல் நீதிபதி கே.செல்வபாண்டி முன் டிஎஸ்பி சண்முகசுந்தரம் ஆஜரானார். இதனால், டிஎஸ்பிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரன்டை ரத்து செய்த நீதிபதி விசாரணையை மார்ச் 5க்கு தள்ளி வைத்தார்.

Related Stories: