சென்னை: தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே இன்று (பிப்.27) முதல் கூடுதலாக 20 விரைவு மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடை மேடை 10,11-ல் மேற் கொள்ளப்படும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக, கடந்த 20ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரையில் 45 நாட்கள் மின்சார ரயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக பயணிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், தாம்பரம் – சென்னை கடற்கரை இருமார்க்கமாக கூடுதலாக 20 விரைவு மின்சார ரயில்கள் இன்று முதல் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது; சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் பயணிகள் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் கூடுதலாக 20 விரைவு மின்சார ரயில் சேவைகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இயக்கப்பட உள்ளது.
இந்த விரைவு மின்சார ரயில்களுக்கு மாம்பலம், கிண்டி, எழும்பூர் ஆகிய நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கும், கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கும் 1 மணி நேரத்தில் சென்றடையும்.
இந்த 20 விரைவு மின்சார ரயில்களுக்கான கால நேர அட்டவணையின் விவரம் வருமாறு:- கடற்கரை -தாம்பரம்: 7.50, 8.20, 9.20, 9.50, 10.15 5.15, 5.30, 6.20, 7.10, 8. தாம்பரம் கடற்கரை: காலை 7.40, 8.10, 9.10, 9.40, 10.05, 11.10, மதியம் 12. மாலை 6.05, 6.50, இரவு 7.35. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
