குழந்தைகள் பாலின விகிதத்தை உயர்த்த சிறப்பாக செயலாற்றிய தென்காசி, குமரி, நெல்லை மாவட்ட கலெக்டர்களுக்கு விருது

சென்னை: குழந்தைகள் பாலின விகிதத்தை உயர்த்த சிறப்பாக செயலாற்றிய தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி பாராட்டினார். இந்த மாவட்ட நிர்வாகங்களின் சாதனைகளை பாராட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முதல் பரிசாக ரூ.1,00,000 ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டு பத்திரத்தினை தென்காசி மாவட்ட ஆட்சி தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், இரண்டாம் பரிசாக ரூ.75,000 ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டு பத்திரத்தினை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சி தலைவர் ரா.அழகுமீனா, மூன்றாம் பரிசாக ரூ.50,000 ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டு பத்திரத்தினை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் ஆகியோருக்கு வழங்கி பாராட்டினார்.

Related Stories: