×

செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.120.23 கோடியில் மதுராந்தகம் ஏரி மறுகட்டுமானம்

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.120.23 கோடி செலவில் மதுராந்தகம் ஏரியை ஆழப்படுத்தி கொள்ளளவினை உயர்த்திடும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள மறுகட்டுமானங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஏரியின் கொள்ளளவினை உயர்த்திடும் வகையில் ரூ.120.23 கோடி செலவில் ஆழப்படுத்தி, உபரி நீர்ப் போக்கிகளை அமைத்தல் பணிகள் மூலம் மீள கட்டமைக்கப்பட்டு விவசாயிகளின் பயன்பாட்டிற்காக முதல்வர் தொடங்கி வைத்தார். மதுராந்தகம் ஏரியின் கொள்ளளவினை உயர்த்தியுள்ளதால், சுமார் 3077.47 ஹெக்டேர் நிலங்கள் பாசனவசதி பெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமை செயலாளர் முருகானந்தம், நீர்வளத்துறை செயலாளர் ஜெயகாந்தன், நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

* ரூ.215 கோடியில்…
சென்னை தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.175 கோடியே 23 லட்சத்தில் 16 கோயில்களில் 22 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.215 கோடியே 79 லட்சத்தில் 21 கோயில்களில் 53 முடிவுற்ற திருப்பணிகள், இணை ஆணையர், உதவி ஆணையர் மற்றும் 10 ஆய்வர் அலுவலகக் கட்டிடங்களையும் காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Tags : Madhurantakam Lake ,Chengalpattu District ,Chennai ,Chief Minister ,M.K. Stalin ,
× RELATED 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை...