குளச்சல்: குளச்சல் அருகே கோடிமுனை கடற்கரையில் நேற்று மாலை டால்பின் மீன் ஒன்று இறந்து கரை ஒதுங்கி கிடந்தது. சுமார் 5.5 அடி நீளமும், 100 கிலோ எடையும் இருந்தது. இதனை பார்த்த அந்த பகுதி மீனவர்கள் சைமன் காலனியில் உள்ள மீன்பிடி பயிற்சி நிலைய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே குளச்சல் மீன்பிடி துறைமுக உதவி இயக்குநர் பிரிஜில்கிராஷ், சைமன்காலனி மீன்பிடி பயிற்சி நிலைய மேற்பார்வையாளர் சந்தோஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
பின்னர் அவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து மாவட்ட வனஅதிகாரி அன்பு உத்தரவின் பேரில் குலசேகரம் வனசரக வனபாதுகாவலர் பூ வல்சன், வனத்துறை கால்நடை மருத்துவர் மனோகரன், குலசேகரம் வனச்சரகர் ராமு, வனவர் பாலமுருகன், வனகாப்பாளர் சுஜின் ஆகியோர் இன்று கோடிமுனைக்கு வந்தனர். பின்னர் இறந்து ஒதுங்கிய டால்பினை, கால்நடை மருத்துவர் மனேகாரன் பிரேத பரிசோதனை செய்தார்.
பின்னர் வனத்துறையினர் பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து, கரையோரம் பெரிய பள்ளம் தோண்டி, டால்பினை புதைத்தனர். பிரேத பரிசோதனை முடிவிற்கு பிறகுதான் டால்பின் எப்படி, இறந்தது என தெரியவரும். மேலும் இறந்து ஒதுங்கிய டால்பின் பெண் ஆகும். இது கருப்பு வகையான இனத்ைத சேர்ந்தது என வனத்துறையினர் தெரிவித்தனர்.
