மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் வி.கே.சசிகலா செய்தியாளர்களிடம் கூறியதாவது: எங்களின் புதிய கட்சியின் பெயரை விரைவில் அறிவிப்பேன். வரும் சட்டமன்றத் தேர்தலில் எங்களின் கட்சி நிச்சயம் பங்கேற்கும். தற்போது கூட்டணி தொடர்பாக பேசிக்கொண்டு இருக்கிறோம். அது விரைவில் நல்லபடியாக முடியும். சட்டமன்றத் தேர்தலுக்கு குறுகிய காலம் இருந்தாலும் பரவாயில்லை, என்னை தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். இதனால் எங்களின் கட்சிக்கு எந்த பிரச்னையும் இருக்காது.
ஏழை மக்கள் மற்றும் தொழிலாளர்களுக்காக தனது உழைப்பை தந்தவர் மறைந்த நல்லக்கண்ணு. அவர் இதுவரை எம்எல்ஏவாகவோ எம்பியாகவோ இருந்ததில்லை. எனினும், அவர் சார்ந்த இயக்கத்துக்கு உண்மையாக இருந்தவர். அனைவரிடமும் அன்பாகவும் பாசமாகவும் பழகியவர். அவரின் இழப்பு, அவரது குடும்பத்துக்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கும் பேரிழப்பாகும். இவ்வாறு சசிகலா தெரிவித்தார்.
