எஸ்.ஐ.ஆருக்கு பின் வெளியான இறுதி வாக்காளர் பட்டியலிலும் குளறுபடி: மதுரவாயலில் ஒரே நபருக்கு 7 வாக்காளர் அட்டை எண்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் தொகுதி இறுதி வாக்காளர் பட்டியலில் ஒரே நபரின் பெயர் 7 இடங்களில் உள்ளது. வாக்காளர் பட்டியல் குளறுபடியால் தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் பணிகள் முறையாக நடந்ததா என சமூக வலைதளங்களில் கேள்வியெழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு (S.I.R) பின்னர் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த 23ம் தேதி தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. அதில், மதுரவாயல் தொகுதி பாகம் எண் 80-ல் உள்ள வாக்காளர் பட்டியலில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் தொகுதியில் உள்ள பூத் ஒன்றில் மணிராஜ் என்ற வாக்காளர் பெயர் ஒரே முகவரியில் 7 முறை வெவ்வேறு வாக்காளர் எண்ணுடன் பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

S.I.R வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின் தேர்தல் ஆணையம் பலருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டது. 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்கச் சொல்லி தேர்தல் ஆணையம் வாக்காளர்களின் விவரங்களைச் சரிபார்த்தது. இந்நிலையில் இறுதி வாக்காளர் பட்டியலில் ஒரே வாக்காளரின் பெயர் பலமுறை இடம்பெற்றிருப்பது தமிழ்நாட்டில் S.I.R பணிகள் சரியாக நடைபெற்றதா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.

 

 

 

 

Related Stories: