ஜாம்புவானோடை அலையாத்திக்காடு செல்லும் லகூன் சாலையை சீரமைக்க வேண்டும்

*சுற்றுலா பயணிகள் கோரிக்கை

முத்துப்பேட்டை : ஜாம்புவானோடை அலையாத்திக்காடுக்கு செல்லும் லகூன் சாலையை சீரமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காடு ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய பரபரபளவுக் கொண்ட காடாகும். இந்த காடு புயல் மற்றும் சூராவளி காற்றிலிருந்தும், சுனாமியிலிருந்தும் கடலோர கிராமங்களையும் கிராம மக்களையும் பாதுகாக்கும் அரணாக விளங்குகின்றன.

மேலும் கடலோரங்களில் எற்படும் மண் அரிப்பை பெருமளவில் தடுத்து நிறுத்துகிறது. அதனால் இந்த காட்டின் அழகை ரசிக்க ஆண்டு முழுவதும் தமிழகம் மற்றுமின்றி இந்தியாவில் பல்வேறு பகுதியிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் இந்த அலையாத்திக்காட்டிற்கு முத்துப்பேட்டையிலிருந்து ஆசாத்நகர் கோரையாறு பாலத்தை கடந்து தொடரும் ஜாம்புவானோடை சென்று அங்கிருந்து லகூன் செல்லும் சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும்.

இந்த சாலை ஜாம்புவானோடை ஊராட்சி மன்ற அலுவலகம் முதல் தர்மகோவில் தொடர்ச்சியாக சென்று லகூன் மற்றும் அலையாத்திக்காட்டு செல்லும் புதிய படகு துறை வரையிலான சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலை போட்டு சுமார் 15 வருடங்களுக்கு மேலாகிறது.

அப்போதே இந்த சாலை முறையாக போடாததால் அடுத்த ஆண்டுகளில் ஜல்லிகள் பெயர்ந்து சேதமாகியது பின்னர் ஆண்டுகள் கடந்ததால் தற்போது இந்த சாலை நெடுவெங்கும் ஜல்லிகள் பெயர்ந்து சேதமாகி மக்கள் பயன்படுத்த முடியாதளவில் குண்டும் குழியுமாக உள்ளது. மழைக்காலத்தில் பல பகுதியில் சாலை பயன்படுத்த முடியாதளவில் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கும் காட்சியளிகிறது.

மேலும் சாலை இருபுறமும் கருவை மரங்கள் படர்ந்துள்ளது. இதனால் நடந்து செல்லவும் வாகனங்களில் மக்கள் செல்லவும் சிரமம்மாக உள்ளது. அதனால் அலையாத்திகாடு மற்றும் லகூன் பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள், அவ்வழியில் வசிக்கும் மக்கள் கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு மிகவும் சிரமம்மாக உள்ளது. கடந்த 10ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக அரசு கண்டுக்கொள்ளவே இல்லை. அதனால் தற்போதைய அரசு இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என கிராம மக்களும் சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: