இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 4 பேர் கொண்ட தொகுதி பகிர்வு பேச்சுவார்த்தை குழு: மாநில செயலாளர் வீரபாண்டியன் அறிவிப்பு

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 4 பேர் கொண்ட தொகுதி பகிர்வு பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாக குழு கூட்டம் எஸ்.கலைச்செல்வம் தலைமையில் நடந்தது. நான்கு உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை குழு எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், திமுக தலைமையோடு தொகுதி பகிர்வு பேச்சுவார்த்தை நடத்த வீரபாண்டியன், (மாநிலச் செயலாளர்) முத்தரசன், கே.சுப்பராயன் எம்.பி., பழனிசாமி ஆகிய நான்கு உறுப்பினர்கள் கொண்ட பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டது. இந்த குழு வரும் 27ம் தேதி முதல்கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: