தமிழக மீனவர் பிரச்னையில் ஒன்றிய அரசு அலட்சியம் நடவடிக்கை எடுக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: செல்வப்பெருந்தகை எச்சரிக்கை

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தை சேர்ந்த 116 மீனவர்கள் இலங்கை அரசின் காவலில் இருந்து வருகின்றனர். இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பலமுறை கடிதம் எழுதியும் கைது செய்யப்பட்ட மீனவர்களும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளும் இதுவரை விடுவிக்கப்படவில்லை. பாஜ அரசின் வெளியுறவுத்துறை தமிழக மீனவர் பிரச்னையில் அலட்சியப்போக்குடன் நடந்து கொண்டு வருகிறது. இத்தகைய ஒன்றிய அரசின் தமிழக மீனவர் விரோதப் போக்கை தமிழக காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். கைது செய்யப்பட்ட மீனவர்களும் பறிமுதல் செய்யப்பட படகுகளையும் உடனடியாக இலங்கை கடற்படை விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: