சென்னை: அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் விடுபட்ட விவரங்களை உடனே எமிஸ் தளத்தில் பதிவுசெய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் நரேஷ், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் னுப்பிய சுற்றறிக்கை: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டில் (2026-27) மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்குவதற்காக அளவெடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. அதன் விவரங்கள் எமிஸ் தளத்தில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. அதேநேரம் முந்தைய 2025-26ம் கல்வியாண்டில் சில மாணவர்களின் விவரங்கள் எமிஸ் தளத்தில் இருந்து விடுபட்டுள்ளன. இதையடுத்து அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் விடுபட்ட விவரங்களை உடனே எமிஸ் தளத்தில் பதிவுசெய்ய வேண்டும்.
