கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு கிருஷ்ணா நீர் திறப்பு

ஊத்துக்கோட்டை: ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கடந்த வருடம் ஜூலை மாதம் 1ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி வரை 2.50 டிஎம்சி தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள தண்ணீரை அக்டோபர் மாதத்திற்குள் ஆந்திர அரசு வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி இரவு 9 மணிக்கு திடீரென கண்டலேறுவில் தண்ணீர் நிறுத்தப்பட்டது,இந்த தண்ணீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டிற்கு 3.8 டி.எம்.சி மட்டுமே கிடைத்துள்ளது.

இந்தநிலையில் ஜனவரி மாதம் வழங்கவேண்டிய கிருஷ்ணா தண்ணீரை நேற்று முதல் வினாடிக்கு 200 கன அடி வீதமும் இன்று காலை 500 கன அடியாகவும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் ஓரிரு நாட்களில் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டிற்கு வந்துவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: