காட்டம்பட்டி சாலையில் பள்ளம் சீரமைப்பு

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவிலிருந்து காட்டம்பட்டி செல்லும் சாலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த 2 பழமையான மரங்களை வெட்டி அகற்றப்பட்டது. அப்போது மரத்தை அகற்றப்பட்ட இடத்தில் பெரிய அளவிலான பள்ளத்தை நெடுஞ்சாலை துறையினர் சரி செய்யாமல் கிடப்பில் போட்டு சென்றதால் அங்கு அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது.

+இதுகுறித்து நேற்று முன்தினம் தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.இதனைத்தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு நேற்று பள்ளத்தில் இருந்த சாக்கடைகளை சுத்தம் செய்து, கான்கிரீட் கலவையால் பள்ளத்தை மூடி அகலப்டுத்தி சரி செய்தனர். இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்தனர்.

Related Stories: