அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பவன் ஹான்ஸ் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நொறுங்கியது.

 

அந்தமான்: அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பவன் ஹான்ஸ் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நொறுங்கியது. பயணிகள் மற்றும் விமானிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்

அந்தமான் தீவுகளில் உள்ள போர்ட் பிளேரிலிருந்து மாயாபந்தருக்குச் சென்ற ஹெலிகாப்டர், அவசரமாக தரையிறங்கியது. இரண்டு பணியாளர்கள் உட்பட 5 பேருடன் சென்ற பவன் ஹான்ஸ் ஹெலிகாப்டர் இன்று அந்தமான் கடற்கரையில் இந்தியப் பெருங்கடலில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. போர்ட் பிளேரிலிருந்து புறப்பட்ட பிறகு மாயாபந்தருக்குச் செல்லும் வழியில் ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது, இதனால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 5 பேரும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இன்று காலை 9:30 மணியளவில், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள மாயாபந்தருக்கு அருகே ஒரு பவன் ஹான்ஸ் ஹெலிகாப்டரில் ஒரு சிறிய தரையிறங்கும் சம்பவம் ஏற்பட்டது,” அனைவரும் மீட்கப்பட்டு பாதுகாப்பாக உள்ளனர். எந்த காயமும் ஏற்படவில்லை,” என்று செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.

Related Stories: