அமராவதி: ஆந்திராவிம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்பட்ட பாலை குடித்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பாலில் கலப்படம் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
