தலைசிறந்த நிர்வாகியாக மக்கள் மனதில் இடம்பிடித்தவர் ஜெயலலிதா: பிரதமர் மோடி புகழாரம்

டெல்லி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்தார். மனம் கவர்ந்த தலைவர், தலைசிறந்த நிர்வாகியாக மக்கள் மனதில் இடம்பிடித்தவர் ஜெயலலிதா என ஜெயலலிதா பிறந்த நாளில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

பிரதமர் மோடியின் சமூக வலைதள பதிவில்:
ஜெயலலிதா-வை அவரது பிறந்த நாளில் நினைவுகூர்கிறேன். மனம் கவர்ந்த தலைவர் மற்றும் தலைசிறந்த நிர்வாகியாக எண்ணற்ற மக்களின் இதயங்களிலும், மனங்களிலும் அவர் இடம் பிடித்துள்ளார். அவரது வாழ்க்கைப் பயணம் மன உறுதி மற்றும் தீர்மானத்துடன் இருந்தது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில், பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்து வலுவான நோக்கத்துடனும், சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நலத்திட்டங்களாலும் இயக்கப்பட்ட நிர்வாகத்தில் சிறந்த ஆட்சியாளராக திகழ்ந்தார். கருணை, உறுதி என்ற இரண்டு பண்புகளையும் அவர் கொண்டிருந்தார். அவருடனான எனது கலந்துரையாடல்களை மிகுந்த மகிழ்ச்சியோடு நான் நினைவுகூர்கிறேன் என கூறியுள்ளார்.

Related Stories: