அரூர் பகுதியில் சரக்கு வாகனங்களில் தொழிலாளர்களை ஏற்றிச்செல்லும் அவலம்

*விபத்து அபாயம் அதிகரிப்பு

அரூர் : தர்மபுரி மாவட்டம் அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலும் விவசாய தொழில் சார்ந்த பணிகளில் ஏராளமான மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மரவள்ளி கிழங்கு எடுத்தல், கரும்பு வெட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்கு செல்லும் மக்கள், வேலை முடிந்து திரும்பும் போது, போதிய போக்குவரத்து வசதி இல்லாததால், வீடு திரும்பும் போது சரக்கு வாகனத்தில் கிழங்கு, கரும்பு உள்ளிட்ட பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களின் மேல் அமர்ந்து பயணம் செய்கின்றனர்.

அவ்வாறு பயணம் செய்வது மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும் என தெரிந்தும், தொழிலாள்ரகள் அதை தவிப்பதில்லை. கம்பைநல்லூர் பகுதியில் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள், அந்த கரும்பு சோகை ஏற்றி சென்ற, சரக்கு வாகனத்தின் மேலேயே அமர்ந்து ஆபத்தான பயணம் மேற்கொண்டனர்.

இதனால் வாகனங்கள் செல்லும் போது, தவறி விழுந்து உயிரிழப்பதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே சரக்கு வாகனத்தில் இது போன்ற பயணத்தை தவிர்க்க வேண்டும் என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: