மதுரை: காந்தியடிகள் அரை ஆடைக்கு மாறிய மண்தான் மதுரை என மதுரையில் கமல் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெறும் “மறவோம்” நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். காந்தியடிகளை மக்கள் மறந்துவிடக் கூடாது, அவரது வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது மதுரை மண். காந்தியடிகளை தமிழ்நாடு மறவோம் என்பதற்கு அடையாளம்தான் மதுரை அருங்காட்சியகம். என் நண்பர் கமல்ஹாசன் அழைப்பை நான் மறுக்க முடியுமா? என்று கூறியுள்ளார்.
