தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு

விருதுநகர், பிப்.21: உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு கலெக்டர் தலைமையில் அனைத்து அரசு அலுவலர்களும் உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர். உலகத் தாய்மொழி நாள் பிப்ரவரி 21ல் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எப்போதும் தமிழ் என்ற நடைமுறையைக் கொண்டுவரப் பாடுபடுவோம். தேமதுர தமிழோசை உலகெங்கும் ஒலிக்க எந்நாளும் உழைத்திடுவோம்.

அனைத்து ஆவணங்களிலும் தமிழிலேயே கையொப்பமிடுவோம். குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் சூட்ட பரப்புரை செய்திடுவோம். இணையற்ற தமிழுடன் இணையத் தமிழையும் காத்து வளர்ப்போம் என்று உலகத் தாய்மொழி நாளான இன்று உளமாற உறுதி கூறுகிறேன் என்ற உறுதிமொழியினை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் அனைத்து அரசு அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர்.

 

 

Related Stories: