காங்கயம் அருகே 108 ஆம்புலன்சில் பிரசவம்

காங்கயம்,பிப்.21: காங்கயம் அடுத்த கோவில்பாளையத்தை சேர்ந்தவர் செல்வம் (40). இவரது மனைவி சாமிளா (33). நிறைமாத கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்காக வீட்டில் காத்திருந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை சாமிளாவுக்கு பிரசவவலி ஏற்பட்டது. குடும்பத்தினர் அவிநாசிபாளையம் பகுதி 108 ஆம்புலன்ஸ் தகவல் தெரிவித்து, ஆம்புலன்ஸ் மூலம் சாமிளாவை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு புறப்பட்டனர்.

வேலம்பாளையம் அருகில் சென்ற போது சாமிளா பிரசவிக்க தொடங்கினார். இதனையடுத்து ஆம்புலன்சை சாலையோரம் நிறுத்தி அவசர கால மருத்துவ நிபுணர் ஜானகி மற்றும் பைலட் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது சர்மிளாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் மேல் சிகிச்சைக்காக தாய்,சேய் இருவரையும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர். அவசரம் கருதி பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

 

Related Stories: