கள்ளழகர் கோயிலில் நிழற்கூடாரங்கள் அமைப்பு

மதுரை, பிப். 21: அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயிலில் அறநிலையத்துறை சார்பிலும், உபயதாரர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பிலும் பக்தர்களின் வசதிக்கா பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இதில் தற்போது கோடை காலம் தொடங்க உள்ள நிலையில், பக்தர்களுக்கு கோடை வெயில் தாக்கம் இல்லாமல் வரிசையில் செல்ல தனியார் நிறுவனம் சார்பில் 5 நிழற்கூடாரங்கள் உபயமாக கோயில் நிர்வாகத்திடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இதனை ஒட்டி அந்த நிழற்கூடாரங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்நிகழ்வில் கோயில் அதிகாரிகள் மற்றும் உபயதாரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

 

Related Stories: