ஈரோடு,பிப்.21: ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள பணிமனை பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கி கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் நேற்று அங்கு சென்று மயங்கி கிடந்த நபர் இறந்தது தெரிய வந்தது.
இதையடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
