தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே செல்வப்பெருந்தகை கோரிக்கை மீது நடவடிக்கை: அமைச்சர் எ.வ.வேலு உறுதி

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே செல்வப்பெருந்தகை கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்எல்ஏவும், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவருமான செல்வப்பெருந்தகை பேசுகையில், ‘ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பல சாலைகள் பழுதடைந்துள்ளன.

தேர்தலுக்கு முன்பு அவற்றை சீரமைக்க வேண்டும்,’ என்றார். அதற்கு பதில் அளித்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், ‘ஒரகடம் உள்ளிட்ட இடங்களில் அதிக தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் – வண்டலூர் சாலையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், முறைப்படி கடிதம் வழங்கினால் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் தேதி அறிவித்தப்பின் கோரிக்கை விடுத்தால் அடுத்த நிதியாண்டில் தான் செய்ய முடியும்,’ என்றார்.

Related Stories: