உடுமலை, பிப். 18: கோவை- திண்டுக்கல் வழித்தடத்தில் உடுமலை ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. இதன் வழியாக கோவை -மதுரை, திருவனந்தபுரம்- ராமேஸ்வரம், சென்னை- பாலக்காடு, திருச்செந்தூர்- மேட்டுப்பாளையம், திருநெல்வேலி- தூத்துக்குடி ஆகிய ரயில்கள் இயக்கப்படுகின்றன. உடுமலையிலிருந்து தென் மாவட்ட நகரங்களுக்கு தினமும் ஏராளமான மக்கள் ரயிலில் செல்கின்றனர்.
ஆனால் அவர்கள் தற்போது செல்லும் ரயில்கள் போதுமானதாக இல்லை.மேலும் பண்டிகை விடுமுறை நாட்களில் இந்த ரயில்களில் அமர இடம் இன்றியும் நெருக்கடியில் செல்லும் நிலை ஏற்படுகிறது. அவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.எனவே, உடுமலை வழியாக தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
