- பி.என்.ஏ.பாளையம்
- நரசிம்மநாயக்கன்பாளையம்
- செல்வராஜ்
- விக்னேஷ்
- பூச்சியார் மாரியம்மன் கோவில் வீதி
- கோயம்புத்தூர்
பெ.நா.பாளையம், பிப்.18: நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே கார் டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள பூச்சியூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் விக்னேஷ் (29). வாடகை கார் டிரைவர்.
இவர் கடந்த ஒரு மாத காலமாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 14ம் தேதி வீட்டில் இருந்து அவரது மோட்டார் சைக்கிளில் மோட்டார் சைக்கிளில் பூச்சியூர் வேட்டைக்காரன் கோயிலுக்கு சென்றுள்ளார். அங்கு திடீரென வண்டியில் இருந்த பெட்ரோலை பாட்டிலில் பிடித்து தனக்குத்தானே ஊற்றிக்கொண்டு தீப்பற்ற வைத்துக்கொண்டார். தீ வேகமாக பரவியதால் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டு கத்தியுள்ளார்.
அங்கு இருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்து கோவை அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் எதற்காக தீ வைத்துக்கொண்டு விக்னேஷ் தற்கொலை செய்தார்? காரணம் என்ன என்பது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
