கடத்தூர், பிப்.18: கடத்தூர் பகுதியில் தர்பூசணி பழங்கள் அதிகளவில் குவித்து வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், உடலுக்கு குளிர்ச்சியும் தாகம் தீர்க்கும் தன்மையும் கொண்ட தர்பூசணி பழங்களுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது கிலோ ரூ.20 என்ற விலையில் தர்பூசணி விற்கப்படுவதால், விவசாயிகளும் பொதுமக்களும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். சாலையோரங்கள் மற்றும் சந்தை பகுதிகளில் தர்பூசணி பழங்கள் குவித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
