மாவட்டம் தோறும் நூலகங்களை மேம்படுத்த அரசு முனைப்பு

சென்னையில் நடத்தப்படும் பன்னாட்டு புத்தக காட்சி, தமிழை உலக மொழியாக்கும் மிகச்சிறந்த முயற்சியென அனைவராலும் வரவேற்கப்படுகிறது. அறிவார்ந்த புலவர்கள் கூடி விவாதிக்க சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் உருவாக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம், தென்தமிழ்நாட்டின் அறிவாலயமாக திகழ்கிறது. அறிவை பரவலாக்கும் முன்முயற்சியில், கோவை, திருச்சி, கடலூர், சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாநகரங்களில், மொத்தம் ரூ.902 கோடி மதிப்பீட்டில் நவீன நூலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மாவட்டம் தோறும் நூலகங்களை மேம்படுத்தி. அறிவார்ந்த தமிழ் சமூகத்தை உருவாக்குவதில் முனைப்புடன் தமிழக அரசு செய்து வருகின்றன.

Related Stories: