சென்னை: அரசின் தொடர் நடவடிக்கையால் தமிழகத்தில் வேளாண் பரப்பு 3 லட்சம் ஏக்கர் அதிகரித்துள்ளது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் ’20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சிறுதானியம் பயிரிடப்பட்டது. ரூ.482 கோடியில் குறுவை சாகுபடி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது; நடப்பாண்டு 12.48 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது’ எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
