உயர்கல்வித்துறைக்கு ரூ.8,505 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் தங்கம் தென்னரசு

 

சென்னை: உயர்கல்வித்துறைக்கு ரூ.8,505 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். பொறியியல் கல்லூரிகளில் 7.5% இட ஒதுக்கீட்டில் பயின்ற மாணவர்களுக்கு கல்வி, விடுதி கட்டணமாக ரூ.1,512 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.902 கோடியில் கோவை, நெல்லை, திருச்சியில் நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 6,75,885 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

Related Stories: