மயங்கி விழுந்த என் கணவர் உயிரை காப்பாற்றியது; ரூ.5 ஆயிரம் மகளிர் உரிமைத்தொகைதான்: நெகிழ்ச்சியுடன் முதல்வருக்கு நன்றி தெரிவித்த பெண்

 

வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தை சேர்ந்தவர் பத்மாவதி. இவரது கணவர் சுப்பிரமணி, விவசாயி. இவர்களுக்கு 1 மகள், 3 மகன்கள் உள்ளனர். கடந்த 13ம் தேதி காலை சுப்பிரமணிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். செய்வது அறியாமல் திகைத்த பத்மாவதி மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல உறவினர்களிடம் கடன் கேட்க முயன்றனர். அப்போது தமிழக அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகை ரூ.5,000 திடீரென வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதை பார்த்த பத்மாவதி பெரும் மகிழ்ச்சி அடைந்து உடனடியாக கணவரை காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சேர்த்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து வருகிறார். மேலும் தொடர் சிகிச்சைக்காக மருத்துவ காப்பீடு அட்டை பெற எம்பி எம்.எஸ்.தரணிவேந்தனிடம் வேண்டுகோள் வைத்தார். அப்போது எம்பியிடம், பத்மாவதி கூறுகையில், ‘எனது கணவரின் உயிரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய மகளிர் உரிமை தொகை ரூ.5,000தான் காப்பாற்றியது. முதல்வருக்கு எனது நன்றி’ என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

பின்னர் பத்மாவதி நிருபர்களிடம் கூறுகையில், ‘மகளிர் விடியல் பயணம் பெண்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது போல் மகளிர் உரிமைத்தொகையும் மிகுந்த பயனுள்ளதாக உள்ளது. இதற்கெல்லாம் மேலாக ரூ.5,000 தற்போது வழங்கியது பெண்கள் மத்தியில் பெரும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்வதை செய்யக்கூடியவர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். உரிய நேரத்தில் எனக்கு பணம் வழங்கி திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட எனது கணவருக்கு உரிய சிகிச்சை அளிக்க உதவிய முதல்வருக்கு நன்றி’ என்றார்.

Related Stories: