சேலம்: சேலத்தில் நேற்று நடந்த தவெக பரப்புரை கூட்டத்தில் மயக்கமடைந்து உயிரிழந்த சூரஜ்-ன் உடலை வாங்க குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். “குடும்பத்தை காப்பாற்ற தவெக சார்பில் விஜய் உதவி செய்யவேண்டும். அதுவரை உடலை பெறமாட்டோம். தவெக சார்பில் இதுவரை யாரும் வந்து சந்திக்கவில்லை; ஒரு ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை” என குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர். சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த சூரஜ் உடலுக்கு உடற்கூறு ஆய்வு நடைபெற்று வருகிறது.
