பல்லடம், பிப்.14: பல்லடத்தில் அரசால் தடை செய்யப்பட்ட 10 கிலோ புகையிலை பொருட்களை விற்பனைக்கு கொண்டு சென்ற 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். பல்லடம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் அரசால் தடை செய்யப்பட்ட 10 கிலோ 230 கிராம் புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து அவற்றையும், ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு கொண்டு சென்ற ராஜஸ்தான் மாநிலம் ஆசாத் நகர், பில்வாரா பகுதியை சேர்ந்த யதேந்திரசிங் (42), பல்லடம் காளிவேலம்பட்டியை சேர்ந்த முருகேசன் (49) ஆகியோரை போலீசார் கைது செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பல்லடம் கிளை சிறையில் அடைத்தனர்.
