சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 4-ல் மெட்ரோ இரயில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 4-ல் பூந்தமல்லி புறவழிச்சாலை நிலையம் முதல் வடபழனி வரை மெட்ரோ இரயில் பாதுகாப்பு ஆணையரின் ஆய்வு இன்று தொடங்கியது

முதல் நாள்: இன்று (11.02.2026) பூந்தமல்லி புறவழிச்சாலை நிலையம் முதல் அய்யப்பன்தாங்கல் மெட்ரோ இரயில் நிலையம் வரை ஆய்வு நடைபெற்றது. சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தில், வழித்தடம் 4-ல் பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் வடபழனி வரையிலான 14.64 கி.மீ. நீளமுள்ள உயர்மட்ட வழித்தடத்தில், மெட்ரோ இரயில் பாதுகாப்பு ஆணையர் அனந்த் மதுகர் சௌத்ரி குழுவினருடன் இன்று (11.02.2026) முதற் கட்ட ஆய்வைத் தொடங்கியுள்ளனர். இந்த ஆய்வானது இன்று (11.02.2026) மற்றும் நாளை (12.02.2026) நடைபெறுகிறது.

ஆய்வுக்கு உட்படுத்தப்படும் 11 மெட்ரோ இரயில் நிலையங்கள்: பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ, பூந்தமல்லி மெட்ரோ, முல்லைத்தோட்டம் மெட்ரோ, கரையான்சாவடி மெட்ரோ, குமணன்சாவடி மெட்ரோ, காட்டுப்பாக்கம் மெட்ரோ, அய்யப்பன்தாங்கல் மெட்ரோ, தெள்ளியாரகரம் மெட்ரோ, போரூர் புறவழிச்சாலை மெட்ரோ, போரூர் சந்திப்பு மெட்ரோ, வடபழனி மெட்ரோ. முதல் நாள் ஆய்வின் தொடக்கமாக, மெட்ரோ இரயில் பாதுகாப்பு ஆணையர் அனந்த் மதுகர் சௌத்ரி, மற்றும் அவரது குழுவினர், இரண்டாம் கட்டத் திட்டத்தில் 4-வது வழித்தடத்தில் பூந்தமல்லி புறவழிச்சாலை நிலையம் முதல் அய்யப்பன்தாங்கல் மெட்ரோ நிலையம் வரையிலான 6.134 கி.மீ. நீளத்திற்கு இன்று (11.02.2026) தங்களது முதற் கட்ட ஆய்வினை மேற்கொண்டனர்.

ஆய்வுக் குழுவில் மெட்ரோ இரயில் பாதுகாப்பு ஆணையர் அனந்த் மதுகர் சௌத்ரி, 3 பாதுகாப்பு துணை ஆணையர்கள் (Dy. CMRS), சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர்கள் தி. அர்ச்சுனன் (திட்டங்கள்), மனோஜ் கோயல், (அமைப்புகள் மற்றும் இயக்கம்), மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர். இந்த முதற் கட்ட ஆய்வின் போது, கட்டுமானப் பணிகள், மின்சாரம், தண்டவாளக் கூறுகள் மற்றும் முக்கிய மேம்பாலக் கட்டமைப்புகள் ஆகியவை விரிவாக ஆய்வு செய்யப்பட்டன.

Related Stories: