இந்தியாவின் ஜவுளித்துறையை வங்கதேசம் அழிக்கப் போகிறது: மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு

டெல்லி: அவையில் பேச எனக்கு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என மக்களவையில் ராகுல் காந்தி கூறினார். பொருளாதார ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள 2 அம்சங்கள் குறித்து பேச வேண்டும். அமெரிக்காவின் ஆதிக்கத்தை சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் எதிர்க்கின்றன. போர் சூழல் ஓய்ந்துவிட்டது என்று பிரதமர் மோடி கூறுவது தவறானது என ராகுல் காந்தி கூறினார்.

மக்களவையில் பட்ஜெட் மீதான விவாத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது;
கொள்கைகளை தீர்மானிப்பதில் கணிக்க முடியாத தன்மைக்கு பெயர் பெற்ற டிரம்பை கையாள்வதில் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டிருக்க வேண்டும். அமெரிக்கா தன்னை சர்வாதிகாரியாக காட்டிக்கொள்ள இந்தியாவை பயன்படுத்துகிறது. பாரத மாதாவை விற்றுவிட்டீர்கள். இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் எரிசக்தி துறையில் நமது பாதுகாப்பு பறிபோய்விட்டது. இந்த வர்த்தகம் மூலம் இந்தியாவையே விற்றுவிட்டீர்கள்.

இந்தியா மீதான வரி 3%லிருந்து தற்போது 18%ஆக உயர்ந்துள்ளது. இந்த ஒப்பந்தம் இந்திய விவசாயிகளின் நலன்களை நசுக்கும். அதானியின் வழக்கை காட்டி பிரதமர் மோடியின் கழுத்தை அமெரிக்கா நெறித்துவிட்டது. அதனால்தான், பாரதமாதாவை விற்றுள்ளார். AI தொழில்நுட்பத்திற்கு எரிபொருளாக இருக்கும் தரவுகளை, வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்தியர்களின் தரவுகள் இலவசமாக அமெரிக்காவுக்கு செல்வதற்கு மோடியின் பாஜக அரசு வழி கொடுத்துள்ளது.

இயந்திரமாக்கப்பட்ட அமெரிக்காவின்|பிரமாண்டமான விவசாயத்துறை, இந்திய விவசாயிகளை அழிக்கப் போகிறது. மோடி உள்பட எந்தவொரு பிரதமரும் இதுபோன்ற ஒப்பந்தத்தில், நெருக்கடி இல்லாமல் கையெழுத்திட மாட்டார்கள் என நம்புகிறேன். கழுத்த நெரிக்கும் நெருக்கடியால் மட்டுமே இதுபோன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்தி போடுவார்கள்.

இந்தியாவின் ஜவுளித்துறையை வங்கதேசம் அழிக்கப் போகிறது. 140 கோடி இந்தியர்களின் எதிர்காலத்தை அமெரிக்காவிடம் அடமானம் வைத்துவிட்டார் மோடி என்று கூறினார்.

Related Stories: