டெல்லி: 2011ல் கொளத்தூர் தொகுதி தேர்தல் முடிவுக்கு எதிராக அதிமுகவில் வேட்பாளராக போட்டியிட்ட சைதை துரைசாமி தொடர்ந்த வழக்கில், நீங்கள் கொடுத்த ஆதாரங்கள் ஒன்றோடு ஒன்று முரணாக இருக்கிறது என உச்சநீதிமன்றம் நீதிபதிகள் கூறினர். மேலும் ஒருநாள் அவகாசம் கேட்ட சைதை துரைசாமி தரப்புக்கு, “கடந்த 2 மாதங்களாக செய்யாத விஷயத்தை ஒரே நாளில் செய்து முடிப்பீர்களா ?” என நீதிபதிகள் கேட்டுள்ளனர். அடுத்தவாரம், 17 மற்றும் 18ம் தேதியில் வழக்கின் விசாரணை முடிக்கப்படும் எனவும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
