வளர்ச்சி திட்டப்பணிகள் ஆய்வுக்கூட்டம்

 

திருப்பூர், பிப்.11: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து அரசு துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்தார். மாவட்ட கலெக்டர் மனிஷ் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், ‘தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த ஆகஸ்ட் மாதம் உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்தும், வருவாய் துறை சார்பில் வீட்டுமனை பட்டா வேண்டி விண்ணப்பத்தோரின் விவரங்கள், வட்டம் வாரியாக தயார் நிலையில் உள்ள பட்டாக்கள் எண்ணிக்கை, பல்வேறு அரசு துறைகளுக்கு நிலம் ஒதுக்கீடு செய்ய நிலுவையில் உள்ள விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

Related Stories: