ஈரோடு, பிப்.11: ஈரோடு, டெக்ஸ்வேலி வளாகத்தில் முதல் தென் இந்திய யோகா போட்டி நடைபெற்றது. இதில், பெருந்துறை கொங்கு இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று பல்வேறு பிரிவுகளில் பரிசுகள் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர். தரவரிசை பிரிவில் மாணவிகள் ரிதிகா மற்றும் மைத்ரேயீ முதல் இடமும், லக்ஷணிகா மற்றும் ரக்ஷிதா இரண்டாம் இடமும் பெற்றனர். மாணவி ஜனனி பிரியா மூன்றாம் இடம் பெற்றார். மாணவர்கள் பிரிவில் ஆகாஷ் மூன்றாம் இடம் பெற்றார். சிறப்பு பிரிவில் மாணவி பிரகதி முதல் இடமும், பிரணிகா இரண்டாம் இடமும், மகதி மூன்றாம் இடமும் பெற்றனர்.
