கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததாக புகார்: சிவகாசியில் 500க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளுக்கு நோட்டீஸ்

 

சிவகாசி: இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பயன்படுத்தும் 90 சதவீத பட்டாசுகள் சிவகாசி, சாத்தூர், ஏழாயிரம்பண்ணை உட்பட விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. சுமார் 1,000க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூலம் 8 லட்சம் பேர் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.
ஆண்டுக்கு சுமார் ரூ.7 ஆயிரம் கோடி அளவில் வர்த்தகம் நடைபெற்று வரும் நிலையில் பட்டாசு உற்பத்தி விற்பனை மூலம் அரசுக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வரியாக பல கோடி ரூபாய் செலுத்தப்படுகிறது.

இந்த நிலையில் பட்டாசு ஆலைகளுக்கு ஜிஎஸ்டி வரியில் புதிய நடைமுறையை அதிகாரிகள் கொண்டு வந்துள்ளனர். அதன்படி பட்டாசு ஆலைகள், பட்டாசு உற்பத்திக்கு வாங்கும் வேதிப்பொருட்களின் அடிப்படையில் விற்பனையை நிர்ணயம் செய்து ஜிஎஸ்டி வரியை கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஒவ்வொரு பட்டாசு ஆலைகளும் சுமார் ரூ.50 லட்சம், ரூ.70 லட்சம், ஒரு கோடி என ஜிஎஸ்டி வரியை கட்ட வேண்டுமென விளக்கம் கேட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 500க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளுக்கு வணிகவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஜிஎஸ்டி வரி வசூலில் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதால் பட்டாசு உற்பத்தியாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம் சிவகாசியில் இன்று மாலை நடைபெறுகிறது.

Related Stories: